தஞ்சாவூர், ஏப்.13- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள ‘‘மக்கள் கவிஞர்’’ பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு மணிமண்டபத்தில், அன்னாரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியன், நகர்மன்றத் தலைவர் சண்முகப் பிரியா செந்தில்குமார், பட்டுக்கோட்டை வருவாய் கோட் டாட்சியர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் சௌந்தர ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேம லதா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கார்த்திக் ராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் பார்த்தி பன், நகரச் செயலாளர் செந்தில்குமார் உட்ப பலர் கலந்து கொண்டனர்.