districts

img

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தஞ்சையில் ஆட்சியர், கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தஞ்சாவூர், டிச.3-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டையில் வடகிழக்கு பருவமழை முன் னேற்பாடு பணிகளை மாவட்ட கண் காணிப்பு அலுவலர் மற்றும் இயக்கு நர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை ஆனந்த், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  பட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், பேரிடர் கால மீட்பு பணி உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை பார்வை யிட்டனர். பட்டுக்கோட்டை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் பேரிடர் தடுப்பு பணிக்காக மரம் வெட்டும் கருவிகள் தயார் நிலையில் இருப்பதையும், பட்டுக்கோட்டை நீர்வள  ஆதாரத்துறை சார்பில் அக்னியாறு வடி நில கோட்ட அலுவலகத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதையும், துவரங்குறிச்சி ஊராட்சி  மன்ற அலுவலகத்தில் மரம் அகற்றும் கருவிகளையும், தம்பிக்கோட்டை சரக வருவாய் அலுவலகத்தில் முன்னேற் பாடு பணிகளையும், நரசிங்கபுரம் ஊராட்சியில் பல்நோக்கு புயல் பாது காப்பு மைய கட்டடத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ள பேரிடர் தடுப்பு முன்னேற் பாடு பணிகளையும், ராஜாமடம் கீழத் தோட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புயல் பாதுகாப்பு மையத் தையும், பல்நோக்கு பேரிடர் மைய கட்ட டத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்த னர்.