கரூர்,பிப்.22- கரூர் மாவட்டம் புகளுர் நகராட்சி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 22 அன்று பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். புகளுர் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களின் வீட்டிற்கு நேரில் சென்று மக்கும் குப்பை மக்காத குப்பை என தனியாக பிரித்து பெற்றுக் கொள்ளும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தும், பின்னர் தூய்மை பணியாளர்கள் நீங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறி வுறுத்தினார். புதிதாக கட்டப்பட்டுள்ள ரூ.94 லட்சம் மதிப்பீட்டில், 179 கடைகள் அமைக்கப்பட்டுள்ள தினசரி மற்றும் வார சந்தையினை பார்வையிட்டும், பழைய புகளுர் நகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 32 பள்ளிகளை சேர்ந்த குழந்தைகளுக்கு தினசரி வழங்கப்படும் உணவுகள் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று உணவின் ருசி மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதில் புகளுர் நகராட்சி தலைவர் குணசேகரன், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன், புகளுர் நகராட்சி ஆணையர் ஹேமலதா, புகளுர் வட்டாட்சியர். தனசேகரன், பேரூராட்சி தலைவர் சி. ரூபா, புஞ்சை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.