நாகப்பட்டினம், மார்ச் 21- நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், நாகப் பட்டினம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜானி டாம் வர்கீஸ், தேர்தல் செலவின பார்வையாளர் ஹிரி ஷிகேஷ் கேமந் பட்கி, மாவட்ட ஊராட்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் வாக னங்கள் செல்லும் இடம், சோதனைச் சாவடி கள், பறக்கும் படைகள் ஆகியவை புவியிடங்காட்டி (ஜிபிஎஸ்) கொண்டு கண்கா ணிக்கப்படுவதை பார்வையிட்டனர். பின்பு ஆட்சியர் தெரிவிக்கையில், “இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை, அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கிக் கொண்டிருக்கும். தொகுதி வாக்கா ளர்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க தொலைபேசி வசதியும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. களப்பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு குழுக்கள் தங்களுடைய நடவ டிக்கைகளை உடனுக்குடன் வாட்ஸ்அப்பில் பதிவேற்றம் செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர்” என்றார்.