மயிலாடுதுறை, டிச.26- 2004 ஆம் ஆண்டு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் தாக்குத லால் நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு கட லோர கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளா யின. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்டத் தில் உள்ள 28 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பலியா யினர். தரங்கம்பாடியில் 319 பேர் உயி ரிழந்தனர். சுனாமியால் உயிரிழந்தவர்க ளின் குடும்பத்தினரும் மீனவ கிராம மக் களும் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில், 19 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செவ்வா யன்று தரங்கம்பாடியில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. ஏரா ளமானோர் கருப்பு பட்டை அணிந்து, கடற்கரையிலிருந்து புறப்பட்டு அமைதி ஊர்வலமாக தரங்கம்பாடி கடைவீதி யில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி னர். பின்னர் தரங்கம்பாடி பழைய ரயில் நிலையம் அருகே சுனாமியால் உயி ரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்த இடத்தில், மலர்வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி னர். இந்நிகழ்வில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவ லர் மணிமேகலை, தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன், வருவாய் மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், மீனவப் பஞ்சாயத்தார்கள் அஞ்சலி செலுத்தி னர். சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு 28 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதே போல் தரங்கம்பாடி அருகே சந்திரபாடி, குட்டியாண்டியூர், வெள்ளகோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்க ளில், சுனாமியால் உயிரிழந்தவர் களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சந்திரபாடி கிராமத்தில் சுனாமி யால் உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பிரமிளா ராஜ்குமார் மற்றும் மீனவ பஞ்சாயத்தார்கள் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆழிப் பேரலை நினைவுத்தூணில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தாட்கோ தலைவர் உ.மதிவாணன், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதி நிதிகள், மாணவ-மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.