புதுக்கோட்டை, செப்.27 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வயலோகம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவ, மாண விகளுடன் திங்கள்கிழமை கலந்துரையாடினார். அப்போது ஆட்சியர் தெரிவிக்கையில், “பள்ளி களுக்குத் தேவையான அடிப் படை கட்டமைப்பு வசதிகள், கூடுதல் வகுப்பறை கட்ட டங்கள், விளையாட்டு மைதா னங்கள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு வரு கின்றன. மாணவ, மாணவி கள் அனைவரும் பாடப் புத்தகங்களை பயில்வது மட்டுமின்றி, சிறந்த அறி ஞர்களின் புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள் உள்ளிட்ட அறிவை வளர்த் துக் கொள்ளும் சிறந்த புத்த கங்களையும் படிக்க வேண் டும். இவ்வாறு படிப்பதன் மூலம் உங்கள் இலக்கினை அடைய முடியும்” என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் எம். மஞ்சுளா, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், தலைமையா சிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.