தஞ்சாவூர், நவ.12 - 2021-2022 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேரும் 18 மாணவ, மாண விகளுக்கு சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் மருத்துவ உபகரணங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்தாண்டு அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாண வர்கள் நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்ற னர். இதில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த 18 மாணவ, மாணவிகள், அரசின் உள் இடஒதுக்கீடான 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் 13 பேர், தமிழ கத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பையும், 5 பேர் பிடிஎஸ் படிப்பையும் தேர்ந்தெடுத்தனர். இவர்களுக்கு நவ.15 ஆம் தேதியன்று முதலாமாண்டு மருத்துவ பட்டப்படிப்புக் கான வகுப்புகள் தொடங்கவுள்ளன. இதை யடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 18 மாணவ, மாணவி களையும் வரவழைத்து அவர்களுக்கு வெள்ளை சீருடை, ஸ்டெத்தெஸ்கோப் ஆகிய மருத்துவ உபகரணங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.சிவக்குமார், நீட் தேர்வு அரசு பள்ளி ஒருங்கிணைப்பாளர் பி.பிரியா, ஆசிரியை என்.மேனகாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.