நாகர்கோவில், பிப்.15- முப்படைகளிலும் அதிக ளவில் பெண்களுக்கு என இடஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அவற்றினை நன்கு தெரிந்து, இராணுவத் துறையிலும் பணியாற்றிட பெண்கள் முன்வர வேண்டு மென குமரி மாவட்ட ஆட்சி யர் கேட்டுக்கொண்டார். கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில் கலை மற்றும் அறி வியல் பயிலும் மாணவர்க ளுக்கு தொழில்நெறி வழி காட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சியானது நாகர்கோவில் சுங்கான் கடை ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி கலையரங்கில் வியாழனன்று (பிப்.15) நடை பெற்றது. மாவட்ட ஆட்சி யர் பி.என்.ஸ்ரீதர் குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார். கல்லூரி மாணவர்களி டையே ஆட்சியர் மேலும் பேசுகையில், கன்னியா குமரி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் தொ டர்ந்து நடத்தப்பட்டு வரு கிறது. குறிப்பாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் பயிற்சிகள் நடத்தப்படு கின்றன. கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களும் தங்களை அடுத்தக்கட்ட நிலைக்கு கொண்டு செல்வதற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். முதலாவதாக அரசுப் பணிகளில் சேர்வதற்கான நடைமுறைகளை அறிந்து கொண்டு, அதற்கான பயிற்சிகளில் முழுமூச்சாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இரண் டாவதாக தனியார் நிறுவ னங்களில் என்னென்ன வேலைவாய்ப்புகள் இருக்கி றது என்பதை அறிந்து கொண்டு, தங்களுக்கு விருப்பப்பட்ட பணிகளில் சேர்வதற்கு முன்வர வேண் டும்.
மேலும் நமது மாவட் டத்தை தவிர்த்து பிற மாவட் டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வேலைநாடுகளில் பணபுரிவதற்கான மனநிலை யினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்றவாதாக தங்களுக்கு ஆர்வமுடைய சுயதொழில்களை துவக்கி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும். அத்துடன் மத்திய அர சால் நடத்தப்படுகின்ற யு.பி. எஸ்.சி தேர்வுகள், மாநில அரசால் நடத்தப்படுகின்ற குரூப் 1 உள்ளிட்ட தேர்வுக ளையும் எதிர்கொள்ள வேண் டும். மத்திய மாநில அரசுகள் நடத்துகின்ற அனைத்து போட்டித்தேர்வுகளை யும் மாணவ மாணவியர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள வேண்டுமென ஆட்சியர் தெரிவித்தார். வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு – 2024 அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டி – 2024 கையேட்டினை வெளி யிட்டதோடு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்க ளுக்கு பரிசுகள் வழங்கி னார்கள். முன்னதாக ஸ்ரீ அய்யப்பா கல்லூரி கலை யரங்கில் அமைக்கப் பட்டிருந்த தொழில்நெறி வழி காட்டுதல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வை யிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா ஜி இம்மானுவேல், ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி முதல்வர் முனை வர் வி.ஆர்.அஞ்சனா, மாவட்ட தொழில் மைய மேலாளர் பெர்பெட், பேரா சிரியர்கள், மாணவியர் கலந்து கொண்டார்கள்.