அரியலூர், மே 3 - மாநில, தேசிய, ஆசிய, காமன்வெல்த் சதுரங்கப் போட்டிகளில் தங்கப் பதக்கங்க ளையும், கோப்பைகளையும் வென்றுள்ளார் அரியலூர் மாவட்டம் உடையார்பாளை யத்தை சேர்ந்த சிறுமி சர்வா ணிகா (9). தற்போது இவர் இளம் சாத னையாளர் விருதும், ஐரோப்பிய நாடான அல்பேனியா (Albania)வில் ஏப்.25 முதல் 29 வரை நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப்-2024 போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் (Rapid) ரேபிட் பிரி வில், இந்தியா சார்பில் கலந்து கொண்டு மொத்தம் 11 சுற்றுகளில் 9 இல் வெற்றி பெற்று, உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் வியாழனன்று உடையார்பாளையத்திற்கு திரும்பிய சர்வாணிகாவை, உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி சுவர்ணா வாழ்த்திப் பாராட்டினார்.