districts

img

தொல்.திருமாவளவனை ஆதரித்து கலை நிகழ்ச்சி மூலம் வாக்குச் சேகரிப்பு

அரியலூர், ஏப்.15- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னவளையம், ஆமணக்கந்தோண்டி, உட்கோட்டை, வீர சோழபுரம், நெல்லித்தோப்பு, மீன்சுருட்டி,  முத்துசேர்வாமடம்,  இளையபெருமாள் நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம், குரு வாலப்பர்கோயில், பெரியவளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிதம்பரம் நாடாளு மன்றத் தொகுதி விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவனை ஆதரித்து பானை சின்னத் திற்கு வாக்குச் சேகரித்தனர்.  தஞ்சை தியாகி என்.வெங்கடாஜலம் கலைக் குழுவினர் சார்பில் கலை நிகழ்ச்சி  வாயிலாக வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.  இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி யச் செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் இளங்கோ வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மணிவேல் ஆகியோர் வாக்குச் சேகரித்து பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.