districts

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கிராமசபைக் கூட்டத்தில் கோரிக்கை

பாபநாசம், மே 2-

    தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள ராமானுஜபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்  ஊராட்  சித் மன்ற தலைவர் கற்பகம் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார். ஊராட்சியில் 100 சதவீதம் குடிநீர் குழாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

   பாபநாசம் அருகே ரெகுநாதபுரத் தில் கிராமசபைக் கூட்டம் நடந்தது. கூட்  டத்திற்கு ஊராட்சித் தலைவர் ஜெய்சங்  கர் தலைமை வகித்தார். இதில் வார்டு  உறுப்பினர்கள் உட்பட கிராம மக்கள்  பங்கேற்றனர். இதில் ரேஷன் கடை யில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   உள்ளிக் கடையில் ஊராட்சித் தலை வர் கணேசன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் அய்யம் பேட்டை- உள்ளிக்கடை- இளங்கார்குடி வரை சாலையை இரு புறமும் அகலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   ராஜகிரியில் ஊராட்சி மன்றத்  தலைவர் சமீமா பர்வீன்  தலைமையில்  நடைபெற்ற கூட்டத்தில் அனைவருக் கும் வீடு வழங்க வேண்டும். நான் முதல்  வன் திட்டத்தை முழுமையாக செயல் படுத்த வேண்டுமென கிராம மக்கள் வலி யுறுத்தினர்.

   திருவாரூர் மாவட்டம், கொரடாச் சேரி வட்டாரத்திற்குட்பட்ட பெருமாள கரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ,திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலை வாணன்,மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டனர்.

   திருவாரூர் மாவட்டம் கொரடாச் சேரி பெருமாளகரம் ஊராட்சியில் நடை பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சி யர் தி.சாருஸ்ரீ  கலந்துகொண்டார். மகா த்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், பிரதம மந்திரி குடி யிருப்பு திட்டம். ஜல் ஜீவன் இயக்கம், பிர தம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் நினைவு உயர்  கல்வி உறுதிதிட்டம், தூய்மைபாரத இயக்கம், ஆகியவை குறித்து விவா திக்கப்பட்டதாகவும் கிராம ஊராட்சிகள்  அனைத்து நிலைகளிலும் தன்னி றைவை பெறும் வகையில் மேற்கொள்  ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்  கைகள், திட்டப்பணிகள் குறித்து விவா தித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட தாக ஆட்சியர் கூறினார்.