வேதாரண்யம், ஏப்.17- நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடிக் கரையில் ஹோவர் கிராப்ட் மூலம் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து வந்துள்ள ஹோவர் கிராப்ட் மூலம் கமாண்டர் விவேக் குமார் தலைமையில் 10 நாட்கள் நடைபெறும் பாதுகாப்புப் பணி நடைபெறுகிறது. தினந்தோறும் இருவேளைகளில் வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் பாக்சல சந்தி பகுதி யில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.