தஞ்சாவூர், நவ.18 - தஞ்சாவூரில் கூட்டுற வுத் துறை சார்பில் வெள் ளிக்கிழமை நடைபெற்ற 70 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 2,315 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 78 லட்சம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். இவ் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், 26 கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகளையும், கூட்டுறவு வார விழா பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை யும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கி னார். தமிழக அரசின் தலை மைக் கொறடா கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.கல்யா ணசுந்தரம், செ.இராம லிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவை யாறு). டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), கா.அண்ணா துரை (பட்டுக்கோட்டை), மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.