அறந்தாங்கி, அக் .26- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த துரையரசபுரத்தில் இயங்கி வரும் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் பண்டிகைக் கால போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நூற்பாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் எல் அலாவுதீன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் எம். அசோகன் . மாவட்ட பொருளாளர் ராதா செல்வமணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா, பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன மாவட்டச் செயலாளர் ஆர். கர்ணா, செல்வராஜ், ஆகியோர் விளக்கிப் பேசினர்.