திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட சிங்களாந்தி குளத்தின் கரையை சுத்தம் செய்து, மரங்கள் நட்டு பொது மக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்விற்கு நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன் தலைமை வகித்தார். நகர்மன்றத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் எம்.கருப்பசாமி மற்றும் துப்புரவுப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.