districts

img

நாகை வேட்பாளர் செல்வராஜூக்கு சிஐடியு வாக்குச் சேகரிப்பு

திருவாரூர், ஏப்.13- தமிழ்நாட்டில் திமுக தலைமையி லான இந்தியா கூட்டணி சார்பாக சிபிஐ  வேட்பாளர்  வை.செல்வராஜ் நாகை  நாடாளுமன்ற தொகுதியில், கதிர் அரி வாள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.  இவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு, சிஐடியு மாவட்ட குழு சார்பில் திருவாரூர் நகரப் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.  திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் இருந்து,  சிஐடியு மாவட்டக் குழு சார்பாக பிரச்சார இயக்கம் சனிக்கிழமை காலை துவங்கியது. பிரச்சாரப் பயணத்தை சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.வீரபாண்டியன் துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா தலைமை வகித்தார். பிரச்சா ரத்தில் மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், மாவட்டப் பொருளாளர் இரா.மாலதி உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நகரப் பகுதியான  நேதாஜி சாலை, பழைய நாகை சாலை,  பள்ளிவாசல் பகுதி, பழைய பேருந்து  நிலையம், பேபி திரையரங்கம் மற்றும் பனங்கல் சாலை உள்ளிட்ட இடங்களில் வர்த்தக வியாபாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வாக்குச் சேகரித்தனர். தொடர்ந்து மாலையில், திருவாரூர்  பெரிய கோவில் உள்ள நான்கு வீதி களில் உள்ள வீடுகளில், மக்களை நேரில் சந்தித்து வை.செல்வராஜுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து தீவிர  வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.