districts

img

ஹட்சன் பால் நிறுவன தொழிலாளர்களுக்கு சிஐடியு ஆதரவு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 11 - தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஹட்சன் தனியார் பால் உற்பத்தி நிறுவ னத்தில் கூலி உயர்வு கேட்டதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலா ளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க  கோரி கடந்த 4 மாதங்களாக நடைபெறும் போராட்டத்தை ஆதரித்தும், சிவகங்கை  மாவட்டத்தில் உள்ள எம்.எம்.எப். தனி யார் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத  போக்கை கண்டித்தும் சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தியது. சிஐடியு மாநகர் மாவட்டக் குழு சார்பில் வெள்ளியன்று திருச்சி தென்னூர்  அரசமரத்தடி  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் பேசினார். சிஐடியு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மயிலாடுதுறையில் சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்க உறுப்பினர்கள் சீனி.மணி, ஆர்.ராமானுஜம், ப.மாரியப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.