திருவாரூர், மே 12- மாநில அளவில் நடை பெற்ற வில்வித்தை போட்டியில், சிஐடியு சுமை தூக்கும் தொழி லாளர் சங்கத்தின் திருவா ரூர் மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திரனின் மகன் க.சாந்தன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த மே 4, 5 ஆம் தேதி ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மூஞ்சிக் கல்லில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் TamilNadu In and outdoor archery association சார்பாக 4 ஆவது மாநில அளவி லான வில்வித்தைப் போட்டி-2024 நடை பெற்றது. இப்போட்டியில் திருவாரூர், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திரு நெல்வேலி, மதுரை, ஈரோடு, கோயம்புத் தூர், சேலம், திருவள்ளூர் போன்ற மாவட்டங் களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட போட்டி யாளர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் டிடைகர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகா டமி இயக்குநர் மற்றும் பயிற்சியாளர் இரா.குணசேகரன் தலைமையில் 9 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தொடக்க வேல் (Bare bow),இந்தியன் வில் (Indian bow Recurve) ஆகிய போட்டி பிரிவு களில் U-6,U-8,U-10,U-12,U-14 U-19 19 வயது பிரிவில் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற திருவாரூர் டிடைகர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் மாணவர்கள் 9 பேரும் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் 6 தங்கப் பதக்கம் மற்றும் 4 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். வெற்றி பெற்று ஊர் திரும்பிய மாண வர்களை, திருவாரூர் மாவட்ட வில் வித்தை சங்கத்தின் நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் தங்கம் வென்றுள்ள மாணவர் க.சாந்தன், சிஐடியு சுமை தூக்கும் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. கஜேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயில்கிறார். பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட வில்வித்தை சங்கம் சார்பாக மாணவருக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது.