districts

img

உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் வழங்கிடுக! இலவச வீட்டு மனை கோரி கரூர் ஆட்சியரகம் முன்பு சிஐடியு போராட்டம்

கரூர்,அக்.16- கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 10 ஆண்டு களுக்கும் மேலாக சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வரும் ஆட்டோ, கட்டுமானம், தையல், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் மூலம் குடியிருப்புகள் வழங்கிட  வேண்டும், ஊரக பகுதியில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுமனை வழங்கப்படும் என்று அதிகாரிகள் மூலமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட மன்மங்கலம் வட்டம், மன்மங்கலம் ராமேஸ்வரபட்டி, கரூர் வட்டம், புலியூர் கிராமம், காளிபாளையம், புகலூர் வட்டம், பவுத்திரம், குரும்பபட்டி, காருடையான்பாளையம், நெடுங்கூர் பகுதி மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ, கட்டுமானம், தையல், பொது தொழி லாளர்கள் சங்கம் (சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் சி.முருகேசன் தலைமை வகித்தார். ஆட்டோ சம்மேளன மாநில பொதுச் செயலாளர் எம்.சிவாஜி சிறப்புரையாற்றினார். கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சி.ஆர். ராஜாமுகமது, மாவட்ட தலைவர் ப.சரவணன் ஆகியோர் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். காவல்துறையின் அராஜகத்திற்கு சிஐடியு கண்டனம் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இருக்கும் போது கரூரில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?     கரூர் மாவட்ட காவல்துறை, ஜனநாயக இயக்கங்கள் போராட்டம் நடத்துவதை முடக்குவதற்கு துணிந்தால், அதனை எதிர்த்து வலுமிக்க போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். கரூர் மாவட்ட காவல்துறை தன்னு டைய அராஜகமான, அடக்குமுறை போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று  சிஐடியு மாநில செயலாளர், எம்.சிவாஜி கூறினார்.