districts

img

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தூய்மைப்பணி தொழிலாளர்களின் பணிநீக்கத்தை ரத்து செய்திடுக!

திருச்சிராப்பள்ளி, மார்ச்  14- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப் படையில் பணிபுரிந்த 120 தூய்மைப் பணி தொழிலாளர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டு, வேறு ஆட்களை பணி அமர்த்தியதை கண்டித்தும். வேலை நீக்கத்தை ரத்து செய்து,120 தூய்மைப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்வ தாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்து சமய அற நிலையத்துறை  அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியூ மாநகர் மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று திருவானைக் காவலில் உள்ள இந்து சமய அற நிலையத்துறை  இணைஆணையர் மற்றும் உதவிஆணையர் அலுவல கம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தி ற்கு  மாநகர் மாவட்ட தலைவர் சீனிவா சன் தலைமை தாங்கினார்.  மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் செல்வி. நிர்வாகிகள் மாறன், ரகுபதி, சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருவானைக்காவல் பகுதியில் இருந்து  புறப்பட்ட பேரணி  இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை வந்தடைந்தது.