புதுக்கோட்டை/திருச்சிராப்பள்ளி, ஆக.20 - பல ஆண்டுகளாக சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் செவ்வாய்க் கிழமை போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் எஸ்.சாத்தையன் தலைமை வகித்தார். திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டியன் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சங்கத்தின் திட்டச் செயலாளர் கு.நடராஜன், பொருளாளர் ஆர்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர். பல ஆண்டுகளாக சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்க வேண்டும். ஒப்பந்தக்காரர் மூலம் அல்லாமல் வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நிய மனம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் போராட்டத்தில் முழக்கங்களாக எழுப்பப் பட்டன. திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மாநகர் சார்பில், மன்னார் புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க வட்டத் தலை வர் நடராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். கோரிக்கைகளை வலியு றுத்தி சங்க வட்டச் செயலாளர் பழனியாண்டி, வட்டப் பொருளாளர் இருதயராஜ், வட்ட துணை தலைவர் செல்வராஜ், கோட்டச் செய லாளர்கள், சிஐடியு புறநகர் மாவட்ட பொரு ளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர்.