districts

img

சிற்றார் அரசு ரப்பர் தோட்டத்தில் அத்துமீறல் அதிகாரிகளைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

குலசேகரம், அக். 5- கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் அரசு ரப்பர் தோட்டத்தில் அத்துமீறி தொழிலாளர்களை மிரட்டும் அதிகாரிகளைக் கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ரப்பர் கழக சிற்றார் கோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளி விஜயகுமார். இவர் கன்னியாகுமரி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்க (சிஐடியு) துணை செயலாளராக உள்ளார். தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து கள உதவியாளரிடம் பேசும்போது அதிகாரி அநாகரிகமாக பேசி அத்து மீறியுள்ளார். பழிவாங்கும் முறையில் மூன்று தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்பாட்டைக் கண்டித்தும் அதிகாரிகள் செய்யும் அநியாயத்தத்திற்கு துணைபோகாததால் ஒரு தொழிலாளிக்கு அநியாயமாக இடமாற்றம் வழங்கியதை கண்டித்தும் அக்.5 வெள்ளியன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிற்றார் கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றபோராட்டத்திற்கு  கன்னியாகுமரி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்க (சிஐடியு) தலைவர் பி.நடராஜன் தலைமை தாங்கினார். சங்க பொதுச் செயலாளர் எம்.வல்சகுமார், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வி.ரகு, சதீஷ் ஆகியோர் பேசினார். இதில் ஞானசெல்வம்(தொமுச), அந்தோணி முத்து (ஏடிபி) மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டம் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நீதி கிடைக்க கேட்டும் இடமாற்றம் செய்வதை வாபஸ் பெற கேட்டும் சனியன்று காலையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ரப்பர் கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள், இடமாற்றம் ரத்து செய்யலாம் எனவும் ஏற்கனவே வேலை செய்த பகுதியில் அவர் வேலை செய்யலாம் எனவும் உறுதி அளித்ததால் காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.