முசிறி, ஜூலை 22 - திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் காவல் நிலைய பேருந்து நிறுத்தம் அருகில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ஆட்டோ நிலைய கிளைத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித் தார். விழாவில் சங்க கொடியை சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். சங்க பெயர் மற்றும் தகவல் பலகையை திருச்சி புற நகர் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சம்பத் திறந்து வைத்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வரதராஜ் வாழ்த்துரை வழங்கி னார். விவசாயிகள் சங்கம் முருகன், கிளை செயலாளர் உதயகுமார், துணைத் தலைவர் சந்திரன், பொருளாளர் கண்ணன், துணைச் செயலாளர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ராஜரத்தினம் நன்றி கூறினார்.