கரூர்,டிச.28- கரூர் மாநகராட்சியில் நிரந்தரமற்ற முறையில் பணி யாற்றும் தூய்மை பணி யாளர்கள் மற்றும் பல்வேறு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் சட்டப்படியான ஊதியத்தை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத் தின் (சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு வழங்கப் பட்டது. அந்த மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: கரூர் மாநகராட்சியில் நிரந்தரமற்ற முறையில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948 இன்படி வெளியிடப் பட்ட அரசாணை 2டி, எண்.62, நாள் 11.10. 2017 ஐ அமல்படுத்த வேண்டும். உரிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாக இயக்குநரின் சுற்றறிக் கையை அடிப்படையாகக் கொண்டு கரூர் மாநகராட்சி யில் நிரந்தரமற்ற முறை யில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், மலேரியா, டெங்கு ஒழிப்புப் பிரிவு, திடக்கழிவு மேலாண்மை, சுகாதார மேற்பார்வையாளர்கள், கணினி இயக்குநர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட் டர்கள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பணிகளில் பணி யாற்றுபவர்களுக்கு உடனடி யாக சட்டப்படியான ஊதிய உயர்வை வழங்கிட கரூர் மாநகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாநகராட்சியில் பணி யாற்றும் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, ஞாயிற்றுக் கிழமை ஊதியத்துடன் விடு முறை வழங்க வேண்டும், மாதம்தோறும் ஊதியத்தை மாத கடைசி தேதியில் வழங்குவதை கைவிட்டு, மாதம்தோறும் 5 ஆம் தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது. சங்கத் தின் மாவட்ட தலைவர் மு.சுப் பிரமணியன் தலைமையில் சிஐடியு மாவட்டச் செயலா ளர் சி.முருகேசன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கரூர் மாநகராட்சி ஆணை யர் சுதாவிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.