அரியலூர், ஆக.7-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து தா.பழூர் வழியாக முத்துவாஞ்சேரி கிராமத்திற்கு செல்வ தற்கு மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சரியான முறையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என கூறி, தா.பழூர் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் காவல் இன்ஸ்பெக்டர் ராஜேந்தி ரன், மறியலில் ஈடுபட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.