மயிலாடுதுறை, ஆக.10-
தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி.பட்டியலில் சேர்க்க வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி மயி லாடுதுறையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
மதத்தின் பெயரால் தலித் மக்களை பிரிக்கும் செயலைக் கண்டித்தும், நீதி யரசர் ரங்கநாத் மிஸ்ரா குழு வின் அறிக்கைப்படி தலித் கிறிஸ்துவர்கள், இஸ்லாமி யர்கள் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டுமென தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறை வேற்றிய தீர்மானத்தை ஒன் றிய அரசு அமல்படுத்த வலி யுறுத்தி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற றது.
ஆர்ப்பாட்டத்தில் மறை வட்ட நிர்வாகிகள் அமல தாஸ், பாஸ்கர், பிலமன்ராஜ், பீட்டர் தாஸ், எலிசபெத் ராணி, பரிமளதாஸ், சினேகா, அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள், மற்றும் மயி லாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, ஆத்துகுடி உள் ளிட்ட மயிலாடுதுறை மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்து ஏராளமான கிறிஸ்த வர்கள் கலந்து கொண்ட னர்.