districts

img

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கு ஏற்புடைய இடம் ஆய்வு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தகவல்

தஞ்சாவூர், ஜூன் 23 -

    தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட் சியகம் அமைப்பதற்கு ஏற்புடைய இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

     தஞ்சாவூர் பெரியகோயில் மேம்பாலம் அருகேயுள்ள இடத்தை வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை யின் போது, தஞ்சாவூரில் ராஜராஜசோழ னுக்கு அருங்காட்சியகம் (மாபெரும் சோழர்  அருங்காட்சியகம்) அமைக்கப்படும் என அப்போதைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச் சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.  

    இந்த அருங்காட்சியகம் அமைப்பதற் காக தஞ்சாவூர் பெரியகோயில் அருகே யுள்ள மேம்பாலம் எதிரில் உள்ள இடத்தை  மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே தேர்வு செய்து, துறைச் செயலர் உள்ளிட்ட அலுவ லர்களிடம் காண்பித்துள்ளார். இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது என துறைச் செயலர்  கூறியதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த இடம் பொருத்தமான தாக இருக்கிறது என சட்டப் பேரவை உறுப்பினர்களும், மேயரும் தெரிவித்தனர்.

    தஞ்சாவூர் மாநகரில் இவ்வளவு பெரிய இடம்  கிடைத்திருப்பது அரிய  வாய்ப்பாக இருக்கிறது. தமிழக முதல்வரின் எண்ணம் வீண் போகாத வகையில் சிறந்த அருங்காட்சியகத் துக்கு இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது.  மேலும், இந்த இடத்துக்கு வருவதற்கான வழிகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்திய பிறகு, இறுதி முடிவு எடுக்கப்படும். ஏறத்தாழ  12 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக 5 ஏக்கர் இடம் கிடைக்கும் சூழல் இருக்கிறது.  

    இதுகுறித்து மேலும் ஆய்வு செய்து, தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு  சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தமிழக  அரசின் தலைமை கொறடா கோவி.செழி யன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர்  சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் உட னிருந்தனர்.