கும்பகோணம், ஜன.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியனின் தாயார் சிந்தாமணி அம்மாள் வயது மூப்பு காரணமாக புதனன்று கும்பகோணம் அருகே உள்ள புளியம்பாடி கிராமத்தில் காலமானார். அவருக்கு வயது 82. அம்மையாரின் இறப்பு செய்தி அறிந்து அனைத்து கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் சாமுவேல்ராஜ், கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, விவசாயி கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடரா ஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி நாகராஜன், தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், போக்குவரத்து மற்றும் சிஐடியு சங்கத்தினர், கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் உள்ளிட்ட பலர் அவ ரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பி னர்கள் பெ.சண்முகம், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், எஸ்.கண்ணன், டி.ரவீந்தி ரன் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.