கரூர் மாவட்டம், கடவூர் தெற்கு ஒன்றியம், மாவத்தூர் ஊராட்சியில் சின்னாம்பட்டி முதல் கோடங்கிபட்டி வரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13.48 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் கே.சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் கீதாசெந்தில் மோகன், ஒன்றிய கவுன்சிலர் பி.ராமமூர்த்தி, கடவூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.கே. சுதாகர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.