மூணாறு, அக். 5- இடுக்கி சின்னக்கனால் பஞ்சாயத்தை இடது ஜன நாயக முன்னணி (எல்டிஎப்) மீண்டும் கைப்பற்றியது. வியாழனன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆறுக்கு ஏழு (6-7) என்கிற நிலை யில் ஜக்கிய ஜனநாயக முன் னணி (யு.டி.எப்) அதிகா ரத்தை இழந்தது. சின்னக்கனால் ஊராட்சி நிர்வாகக் குழுவில் மொத்தம் 13 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், எல்.டி.எப் மற்றும் யு.டி.எப்-க்கு தலா ஆறு உறுப்பினர்களும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் உள்ளனர். இரண்டு முன்ன ணிகளுக்கும் சுயேச்சை ஆதரவளிக்காத நிலையில் முதலில் சீட்டு போட்டு ஆட்சி யைப் பிடித்தது யுடிஎப். கடந்த மாதம் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மா னத்தில் வேணாடு வார்டில் இருந்து ஒரு சுயேச்சை உறுப்பினர் எல்.டி.எப்.க்கு ஆதரவளித்தார். கட்சி நிலை: காங்கிரஸ் - 6, சிபிஐ - 4, சிபிஐ(எம்) - 2, சுயேச்சை - 1. இதில் சுயேச்சை ஆதரவுடன் இடது ஜனநாயக முன்னணி பஞ்சா யத்தை கைப்பற்றியுள்ளது.