districts

img

குழந்தைகள் நலச் சங்க இல்ல மாணவர் மருத்துவப் படிப்புக்கு தேர்வு

தஞ்சாவூர், ஆக. 4-  

       தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலை மையில், இந்திய குழந்தைகள் நலச் சங்க மாணவர் இல்லம் செயல்பட்டு வருகிறது.  

      2015 ஆம் ஆண்டு முதல் 2021 வரை, இந்த  இல்லத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாண வர் சு.வீரமணி, 2020-2021 ஆம் கல்வியாண் டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 508.66  மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார்.  

     மருத்துவப் படிப்பு படிக்க வேண்டு மென்ற ஆவலில் இருந்த ஏழை மாணவர் வீர மணி, நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் படிப்ப தற்கு, குழந்தைகள் நலச்சங்க மாணவர்  இல்ல நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்ட னர். இதன் மூலமாக, மறைந்த தமிழ் ஆசிரி யர் முனைவர் தமிழையா சிவசூரியன் மாண வர் நற்பணி மன்ற முன்னாள் மாணவர் கள், தஞ்சாவூர் கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளி சார்பில் தேவையான முழு நிதி உதவி களையும் செய்து படிக்க வைத்தனர்.

     இந்நிலையில் மாணவர் சு.வீரமணி நீட்  தேர்வில் 365 மதிப்பெண்கள் பெற்று வெற்றி யடைந்து, கடந்த ஜூலை 27 அன்று சென்னையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்டார். அதில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்று மருத்துவக்கல்வி கற்க உள்ளார்.

   இதையடுத்து, இந்திய குழந்தைகள் நலச் சங்க மாணவர் இல்லத்தின் தலைவ ரான மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாண வனுக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகம்  வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.