districts

img

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் குழந்தைகள் சிறப்பு மருத்துவ மையம் தொடக்கம்

திருச்சிராப்பள்ளி, டிச.22- திருச்சி அப்போலோ மருத்துவ மனையில் பிரத்யேக குழந்தை கள் சிறப்பு மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்விழா விற்கு மரு.இனிகோ இருதயராஜ்  தலைமை வகித்தார். திருச்சி மறை  மண்டல பங்கு தந்தை அந்துவன் முன்னிலை வகித்தார்.  திருச்சி குழந்தைகள் மருத்துவ  துறை செயலர் மரு.சிவகுருநாதன் வரவேற்றார். இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் தலைவர்  மரு.ராமநாதன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார்.  குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, விரிவான குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் சிறப்பு சிகிச்சை  பிரிவின் ஒருங்கிணைந்த பிரிவாக  இந்த புதிய மையம் செயல்படும்.  திருச்சி மற்றும் டெல்டா மண்ட லத்தின் சுகாதார சேவை வசதி களில் ஒரு மைல் கல்லாகவும் இருக்கும். இந்த மையமானது பச்சி ளம் குழந்தை, குழந்தைகள் இதய வியல், குழந்தைகள் நரம்பியல் மற்றும் இதர துறை சிறப்பு நிபு ணர்களை கொண்டது. இதன் பன் னோக்கு பரிசோதனைகளை மேற் கொண்டு சிறப்பான சிகிச்சை அளித்து அவர்களை குணமடைய செய்ய முடியும் என அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்தனர்.  குழந்தைகளுக்கு அவசர சிகிச்சைகளை மேற்கொள்ளவும், முழு நேர கண்காணிப்பு மற்றும் பரா மரிப்பை வழங்கவும் நவீன கட்ட மைப்பு சாதனங்களுடன் கூடிய 24x7 சேவை வசதிகள் உள்ளன.  குழந்தைகள் சிறுநீரகவி யல் மருத்துவர் சுதா ஏகாம்பரம்  கூறுகையில், “குழந்தைகளுக் கான சிறுநீரக கோளாறுகளை விரைவாக கண்டறிவதன் வாயி லாக சிகிச்சையில் சிறப்பான பலன்  கிடைக்கும்” என்றார். குழந்தை கள் சிறப்பு மருத்துவர்கள் சிவகுரு நாதன், திவ்யா, ஹிமா பிந்து ஆகி யோர் மூச்சு குறைபாடுகள் உள்ள பச்சிளம் மற்றும் குறைப்பிரசவ குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கூறினர்.   மருத்துவமனை நிர்வாகி மருத்துவர் சிவம், திருச்சி அப் போலோ மையத்தின் தலைவர் ஜெயராமன் ஆகியோர், ‘டெல்டா  மண்டலத்தில் உள்ள குழந்தை களின் ஆரோக்கியத்தை ஊக்கு விப்பது, மிகச் சிறப்பான மருத்துவ வசதிகளை அளிப்பதில் மருத்துவ மனை கொண்டுள்ள உறுதிப்பாட்டை’ எடுத்துக் கூறினர்.