districts

img

சிதம்பரம் வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து ஆ.ராசா‌ வாக்குச் சேகரிப்பு

பெரம்பலூர், ஏப்.10 - சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் தொல். திருமாவளவனை ஆதரித்து பெரம்ப லூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா‌,‌ போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் பானை சின்னத் திற்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது ஆ.ராசா பேசுகை யில், “நேரு பிரதமராக இருந்தார்.  உலகமே இரண்டாக பிரிந்து கிடந் தது. ஆயுதமும், அறிவும் இருக்கிற காரணத்தால் அமெரிக்காவிடமும், ரஷ்யாவிடமும் கூறி உலகத்தில் அணி சேரா நாடுகளை கொண்டு வந்தவர் ஜவஹர்லால் நேரு. உலக அமைதிக்கான தூதுவர் என்று ஜவஹர்லால் நேருவை ஐ.நா.சபை  அறிவித்தது. அந்த ஐ.நா.சபை, தற்போது இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று கூறி பிரதமர் மோடியை கண்டிக் கிறது. காந்தியடிகள் பாடுபட்ட இந்த  மண்ணில் சீக்கியம், பௌத்தம் என்று பல மொழிகள், பல மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநில மக்க ளுக்கும் பல்வேறு வகையில் அந்தந்த  மாநிலங்களுக்கு ஏற்ப உள்ளது.  ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே உடை, ஒரே உணவு, ஒரே  தேர்தல் என்று மோடி கொண்டு வர  நினைக்கிறார். அதற்கான வேலை களை தற்போது மோடி துவக்கி விட்டார். அம்பேத்கர், நேரு, காந்தி யடிகள் ஆகியோர் கொண்டு வந்த அரசியல் சட்டங்களை மோடி ஒழிக்க  நினைக்கிறார். மணிப்பூர் விவகா ரத்தை நாடாளுமன்றத்தில் விவா திக்க கேட்டோம். ஆனால் அனுமதி தரவில்லை.  மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்கை மாற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசினோம். அது நடக்கவில்லை. பா.ஜ.க.வினர் 350 பேர் ஜெய்ஸ்ரீராம் என்று கூறி  நாடாளுமன்றத்தின் உள்ளே வந்த னர். நாங்கள் 35 பேர் பெரியார் வாழ்க என்று முழக்கமிட்டோம். இதைக்  கேட்டு அவர்கள் ஆடிப்போய் விட்ட னர்.  தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.விற்கு ரூ. 6 ஆயிரம் கோடி  நன்கொடை வந்துள்ளது. அதில் நஷ்டம் அடைந்த கம்பெனிகள் மூலம்  பணத்தை உள்ளே விட்டு, வெளியேக்  கொண்டு வந்துள்ளனர். ஊழல் நிறைந் தவர்கள் பா.ஜ.க.விற்குள் சென்றால்,  ஊழலை எல்லாம் மறைத்துவிட்டு புனிதமாகி விடுகின்றனர்” என்றார். மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெக தீசன்,‌ சட்டமன்ற உறுப்பினர் எம்.பிர பாகரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, வி.எஸ்.பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந் திரன், ஒன்றியச் செயலாளர்கள் தி.மதியழகன், சி.ராஜேந்திரன், காங் கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ்,  மாவட்ட இளைஞர் அணி அமைப்பா ளர் து.ஆதவன்ஹரிபாஸ்கர், தலைமை கழக பேச்சாளர் வரகூர் காமராஜ், மாவட்ட மருத்துவ அணி  அமைப்பாளர் டாக்டர் அ.கருணா நிதி, மாவட்ட இளைஞர் அணி  துணை அமைப்பாளர் மா.பிரபா கரன் ஒன்றிய குழு உறுப்பினர் உமா சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.