districts

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சதுரங்கப் போட்டி

புதுக்கோட்டை, ஜூலை 30 -

     புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வையோட்டி புதுக்கோட்டை சதுரங்கக் கழ கத்தால் ஞாயிற்றுகிழமை சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

   போட்டிக்கு புத்தகத் திருவிழா அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  போட்டியை கவிஞர் தங்கம்மூர்த்தி துவக்கி  வகித்தார். அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் அ.மணவாளன், கவிஞர் ஜீவி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். 75 மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சதுரங்கப் போட்டியில் பங்கேற்றனர்.

    பெரியவர்களுக்கான போட்டியில் முதலிடம் பி.ரஞ்சித், இரண்டாமிடம் ஆர். ஜோதிகா, மூன்றாமிடம் சி.ரவி பெற்றனர். சிறுவர்களுக்கான போட்டியில் ஜெயபிர தீபன், அரீஷ் இம்ரன், பால சதுர்த்தியன் ஆகி யோர் முறையே மூன்று இடங்ளில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு புத்த கத் திருவிழா நிறைவு நாளில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

     போட்டிகளை புதுக்கோட்டை சது ரங்கக் கழக நிர்வாகிகள் பேரா.கணேசன்,  பார்த்திபன், அடைக்கலவன், அங்கப்பன்,  நவநீதகிருஷ்ணன், சுதா, தீபா, அறிவியல்  இயக்க நிர்வாகிகள் வீரபாலன், ராமதில கம், ஜெயராமன் உள்ளிட்டோர் ஒருங்கி ணைத்தனர். முன்னதாக அறிவியல் இயக்க  மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வர வேற்றார். பொருளாளர் டி.விமலா நன்றி கூறினார்.