districts

img

சென்னைக்கு கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராது

சென்னை,பிப். 29-  கோடைக்காலம் நெருங்கிவரும் சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக  நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் உள்ளிட்ட துறை சார் உயர் அதிகாரிகளுடன் சென்னை, சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வியாழனன்று (பிப்.29)   ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர் களைச் சந்தித்த அமைச்சர்  கே.என்.நேரு பேசியதாவது,  “குடிநீர் வசதி எல்லா இடங் களிலும் சரியாக உள்ளதா, பழுது பார்க்க வேண்டிய இடங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. கோடை காலம் நெருங்குவதால், ஒவ்வொரு இடத்திலும் குடி நீர் பற்றாக்குறை இல்லாத  அளவிற்கு, அனைத்து இடங்களுக்கும் சீரான  குடிநீர் வழங்க அறிவுறுத் தப்பட்டது. மோட்டார்கள் சரி யில்லாத இடங்களில் சரி செய்யும் வகையிலும், பைப்புகள் பழுதடைந்து இருக்கும் இடங்களில் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது. சென்னையைப் பொறுத்த வரை, 1040 எம்.எல்.டி குடிநீர்  வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக கோடை காலம் என்பதால் கடல்நீரைக் குடி நீராக்கும் திட்டம் மூலம்  150 எம்.எல்.டி வழங்கப்பட  உள்ளது. தண்ணீர் தட்டுப் பாடு இல்லாமல் இருக்க பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத் தல் செய்யப்பட்டுள்ளது. சிஎம்டி மூலம் கடந்த ஆண்டு ரூ.1,000 கோடி வழங் கப்பட்டது, அதில் 500 கோடி மெட்ரோ தண்ணீர் வழங்க கொடுக்கப்பட்டுள்ளது. ரூ. 150 கோடி மாநக ராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ. 9,050 கோடி வடசென்னையில் குழாய் மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் எல்லாம் தேவைப்படுகிறதோ, அதற்கான பணி தொடங் கப்படும். இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. கடல்நீரைக் குடிநீராக் கும் திட்டம் மூலம், சென்னை யில் கூடுதலாக 150 எம்எல்டி  விநியோகிக்கப்பட உள்ளது.  இதேபோன்று மதுரையி லும் அதற்கான பணிகள்  நடைபெற்று வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு வரும்  இடத்திலும், தேவைப்படும் இடத்திலும் பணிகளைச் சரியாக செய்து வருகிறோம்.  எனவே, ஏரிகளில் தண்ணீர் இருப்பு போதுமானதாக இருக்கிறது. வீராணம் ஏரியில் இருந்து மட்டும்தான் சென்னைக்கு சற்று குறை வாக தண்ணீர்  வழங்கப்படு கிறது. கடல் நீரைக் குடிநீராக் கும் திட்டம் மூலம், 150 எம்எல்டி கூடுதலாக வழங்கு வதால் பிரச்சினை எழாது. குவாரிகளில் இருந்தும் தேவைக்கேற்ப தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப் படும்” என்றும் அமைச்சர் நேரு மேலும் கூறினார்.