districts

img

அராஜகமாக செயல்படும் அறநிலையத்துறை அதிகாரிகள்

மயிலாடுதுறை, ஜன.24 - தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்  சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு காத்திருப்பு போராட்டம் அமைப்பின் மாவட்டத் தலைவர் த.ராயர்  தலைமையில் நடைபெற்றது.  போராட்டத்திற்கு அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் வ.செல்வம் போராட் டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநிலப் பொருளாளர் எஸ்.துரைராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய்,  விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி. சிம்சன், விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ப.குணசுந்தரி மற்றும் அமைப்பின் பொறுப்பாளர்கள், விவசாய  சங்க நிர்வாகிகள் உரையாற்றினர். போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை நகரம் 15, 16-வது வார்டில் அமைந்துள்ளது திரௌபதி அம்மன் கோயில். இக்கோயிலின் பெய ரில் உள்ள 38263 சதுர அடி அடிமனை யில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல  தலைமுறைகளாக குடியிருந்தும், சிறு  வணிகம் செய்தும் வருகின்றன. இவர்கள்  செலுத்த வேண்டிய பகுதி/ வாடகை யினை எந்தவித நிலுவையும் இல்லாமல்  இதுநாள் வரையிலும் செலுத்தி வரு கின்றனர். இது தனியார் கோயில் என்பதால் அறங்காவலர்களுக்குள் கோயிலை யார் நிர்வகிப்பது என்ற கருத்து முரண்பாடு உள்ளது. இதன் காரணமாகவும், வாட கையை யார் பெறுவது என்ற அதிகார  மோதலின் காரணமாகவும் நீதிமன்றத்தில்  வழக்கு நடைபெற்று வருகிறது. இருப்பி னும் அடிமனை பயனாளிகள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை தொகை யினை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளனர். 

இந்நிலையில், இந்து சமய அற நிலையத்துறை, அவர்களது அதிகார  வரம்பை மீறி சட்டத்திற்கு புறம்பாக, அந்த தனியார் கோயிலில் தற்போதுள்ள  அறங்காவலர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பயனாளிகள் செலுத்த வேண்டிய  வாடகையை பல மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும், முன் தேதியிட்டு கணக்கீடு செய்து, நிலுவைத் தொகை யாக ஒவ்வொருவரும் பல லட்சங்கள் தர  வேண்டும் என்கிறது.  இந்தத் தொகையினை 15 தினங்களுக் குள் செலுத்தவில்லை என்றால் குடி யிருப்போரை அப்புறப்படுத்துவோம் என்றும், கதவுகளை பூட்டி சீல் வைத்து விடு வோம் என்றும் மக்களை மிரட்டி வரு கின்றனர். இது சம்பந்தமாக பல்வேறு வழக் குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை யத்துறை நியாய வாடகை சம்பந்தப்பட்ட சட்டத்தினை மறு பரிசீலனைக்கு உட்படுத்த  வேண்டும். இதில், அரசு அமைத்துள்ள குழுவின் பரிந்துரைகள் குறித்து இறுதி  முடிவு எட்டப்படும் வரை பயனாளிகள் தற்சமயம் செலுத்தும் வாடகையை ஏற்றுக்கொள்ள வேண்டும். கோயில்  நிர்வாகமோ, இந்துசமய அறநிலையத் துறையோ பயனாளிகளை அப்புறப்படுத் தும் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடு படக் கூடாது.

கோயில், மடம், அறக்கட்டளை இடங் களில் குடியிருப்பவர்கள், வணிகம், விவசாயம் செய்பவர்கள் மின் இணைப்பு கோரினால், மேல் கூரைக்கான வரி செலுத்தப்பட்டிருந்தால் மின் இணைப்பு தருவது என்ற நடைமுறை உள்ளது. சமீப  காலமாக மின் இணைப்பு கோருபவர்களி டம், அடிமனையின் உரிமையாளரிடம் தடையில்லா சான்று பெற்று வந்தால் தான் மின் இணைப்பு வழங்கப்படும் என மின் வாரிய அதிகாரிகள் கட்டாயப் படுத்துகிறார்கள்.  குறிப்பாக தேரிழந்தூர் ஆமருவி பெருமாள் திருக்கோயில், மாப்படுகை நாராயணபுரம் மற்றும் கூறைநாடு மயூர நாதர் நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப் போருக்கும், வணிகம் செய்பவர்களுக் கும் மின் இணைப்பு தராமல் மறுத்து வரு கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடி யாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.  சீர்காழி வட்டம், அகனி கிராமத்தில் சிதம்பரம் பச்சையப்பா டிரஸ்டிற்கு சொந்தமான 170 ஏக்கர் நிலத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு மனைகளும், விவசாய நிலங்களும் கடந்த 90 ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் அனு பவத்தில் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட  குடியிருப்புகளுக்கு கடந்த காலத்தில்  தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு, அரசு வீடுகளும் கட்டி தரப்பட்டுள்ளன. தற்சமயம் மேற்கண்ட இடத்தில் பட்டா  மற்றும் மின் வசதி இல்லாமல் இருப்ப தால் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கியும், அரசு வீடு கட்டுவதற்கும், மின் இணைப்பு வழங்குவதற்கும் உட னடியாக மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

சீர்காழி வட்டம், கோவில்பத்து ஊராட்சி, துறையூர் கிராமத்தில் அரு ணாச்சல முதலியார் என்பவரின் பண்ணை யில் 100 ஆண்டுகளுக்கு முன்பு வேலை  செய்த 7 பட்டியல் வகுப்பு குடும்பங்களுக்கு  தலா 150 குழி வீதம் புஞ்சை திடல் இனா மாக வழங்கப்பட்டது. அந்த நிலம் பண் ணையில் வேலை செய்த குடும்பங்க ளின் வாரிசுதாரர்களின் அனுபவத்தில் இதுநாள் வரையில் இருந்து வருகிறது.  இச்சூழலில் இந்து சமய அறநிலையத் துறை கடந்த 20.12.2023 அன்று எந்த வித முன் அறிவிப்பும் இன்றி, இது எங்க ளுடைய இடம் என்று உரிமை கொண் டாடி, அளவீடு செய்ய வந்தவர்களை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இடம் ஏழை பட்டியல் வகுப்பு குடும்பங்களுக்கு, அவர்களின் மூதா தையர்கள் பண்ணையில் வேலை செய்த தற்காக இனாமாக வழங்கப்பட்டது. இந்த  இடத்திற்கும் அரசு பட்டா வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியு றுத்தி புதனன்று முதல் பகல்-இரவு காத்திருப்பு போராட்டமாக மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடத்துவதென முடிவு செய்யப்பட்டு, மாவட்டம் முழுவ தும் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத் திற்கு திரட்டப்பட்டனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை கோட் டாட்சியர் வ.யுரேகா தலைமையில் செவ் வாயன்று பேச்சுவார்த்தை நடை பெற்றது. அதில், மயிலாடுதுறை திரௌ பதி அம்மன் கோயில் இடத்தில் குடியிருப் போர் மற்றும் சிறு வணிகம் செய்பவர் களின் கோரிக்கைகள் மற்றும் அது சம்பந்தமான பிரச்சனை சுமூகமாக முடி யும் வரை அறநிலையத் துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கோட்டாட்சியர் உத்தரவிட்டு எழுத்துப்  பூர்வமாக உடன்பாடு ஏற்பட்டது. அதேபோன்று சீர்காழி அகனி கிரா மத்தில் பச்சையப்பா டிரஸ்டு, கோவில் பத்து ஊராட்சி துறையூர் கிராமத்தில் 7  பட்டியல் வகுப்பு குடும்பங்கள் சம்பந்த மான பிரச்சனைக்கு 10 நாட்களில் நட வடிக்கை எடுப்பதாக, சீர்காழி கோட்டாட் சியர் அர்ச்சனா போராட்ட களத்திற்கே வந்து போராட்டக்காரர்களின் மத்தியில் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்து  கலைந்து சென்றனர்.       (ந.நி)