பாபநாசம், ஆக.25-
சந்த்ராயன் 3- வெற்றி குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:
நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நமது நாடு சந்திரயான்-3 விண்கலம் மூலம் சாதித்துள்ளது. நமக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
நிலவைத் தொட சந்திரயான் திட்டம் மூலம் எடுக்கப் பட்ட மூன்று முயற்சிகளிலும் முத்திரைப் பதித்த திட்டத்தின் இயக்குநர்களாக மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா மற்றும் வீர முத்துவேல் ஆகிய தமிழர்கள் செய லாற்றியிருப்பது கூடுதல் மகிழ்ச்சியையும் பெருமையை யும் அளிக்கிறது.
மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ள இஸ்ரோ அறி வியலாளர்கள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி யின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரி வித்துக் கொள்கிறேன். அனைத்து இந்தியர்களுக்கும் இது ஒரு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாகும்.