districts

img

கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா

தஞ்சாவூர், ஆக.28-  தஞ்சாவூரில் கராத்தே மாணவர் களுக்கு தகுதித் தேர்வு, பட்டை மற்றும்  சான்றிதழ்கள் வழங்கும் விழா நடை பெற்றது. கிங்கு ஷிட்டோரியு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா சார்பில், கடந்த ஆறு மாதங்களாக பயிற்சி பெற்ற மாண வர்களுக்கு அதற்கான தகுதி தேர்வு,  பாராட்டுச் சான்றிதழ், விருது வழங்கும்  விழா நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் நகரில் உள்ள 300  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு  தங்களது திறமைகளை வெளிப்படுத்தி னர். இதையடுத்து வெள்ளை, மஞ்சள், ஆரஞ்ச், பச்சை, ஊதா, கருப்பு  நிறம் உள்ளிட்ட பட்டைகளை மாணவர் களுக்கு வழங்கி, அடுத்த தகுதிக்கு தயார்படுத்தினர். பின்னர் நடந்த விழாவுக்கு தலை மைப் பயிற்றுநர்கள் எஸ்.அன்பரசன், ஜெ.ஆப்ரஹாம் ஆகியோர் தலைமை வகித்தனர். தூய மரியன்னை மெட்ரிக்  பள்ளி தாளாளர் லாரன்ஸ், பங்கு  தந்தை ஜெ.ஏ.சாலமன், பேராசிரியர் கே. ஆர்.சங்கரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்தி பரிசுகளை யும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.