districts

img

பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த விழா

குடவாசல், டிச.29 -  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் காளியாகுடி ஊராட்சி பழை யார் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், குணசேகரன் தலைமையில் 15 குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் கட்சி யிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணையும் நிகழ்ச்சிக்கு  சிபிஎம் நன்னிலம் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினரும், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பி.ஜெய சீலன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி அனைவரையும் வரவேற்று கட்சி யில் இணைத்துக் கொண்டு செங்கொடி யினை ஏற்றி வைத்து உரையாற்றினர். வாலிபர் சங்க கொடியினை மாவட்ட தலைவர் எஸ்.எம்.சலாவுதீன் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்டகுழு உறுப்பினர்கள் டி.வீரபாண்டியன், ஜெ.முகமது உதுமான், கே.தமிழ்ச் செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை செயலாளர் கலந்து கொண்டனர்.