திருச்சிராப்பள்ளி, ஆக.9 -
ஆகஸ்ட் 15 அன்று 76-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், விமான நிலை யங்கள் ஆகியவற்றில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில், திருச்சி ஜங்சன் ரயில் நிலை யத்தில் 20-க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு போலீசார் டி.எஸ்.பி. பிரபாகரன் தலைமையில், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதில் பயணிகள் உடைமை, பார்சல்கள், ரயில் பெட்டிகளில் சோதனை மேற் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரபாகரன் டிஎஸ்பி செய்தி யாளர்களிடம் கூறுகையில், “76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த சோதனை நடைபெற்றது.
பயணிகள் தாங்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள், நபர்கள் இருந் தால் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ரயிலில் பயணிப்போர் ஓடும் ரயிலில் தவறி விழும் செல்போனை கண்டுபிடிக்கும் வகையில், தாங்கள் தவறவிட்ட இடத்தின் மைல் கல்லை கண்ட றிந்து குறிப்பிட்டால், ரயில்வே பாதுகாப்பு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று போனை கண்டுபிடித்து மீட்டுத் தர உதவியாக இருக்கும். பயணிகள் பலரும் தங்கள் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அயர்ந்து உறங்கி விடுகின்றனர்.
இதனால் செல்போன் திரு டர்கள் எளிதாக செல்போனை களவாடி சென்றுச் விடுகின்றனர். எங்களுக்கு வரும் புகார்களில் 75 சதவீத புகார்கள், செல்போன் திருட்டு தொடர்புடையதாகவே உள்ளது. எனவே ரயிலில் செல்போன் பயன் படுத்தும் பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.