புதுக்கோட்டை, மே 18-
ஜல்லிகட்டு நடத்துவதற்கான தமிழ் நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.
தமிழ்நாட்டிலேயே அதிகமான ஜல்லிக் கட்டு நடத்தும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளை யாட்டுக்களில் ஒன்றாக உள்ள ஜல்லிக் கட்டுப் போட்டியை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனு மதிக்கும் அவரச் சட்டத்தை தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொட ரப்பட்டன. இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்து வதற்கு தலையில்லை எனவும், தமிழ்நாடு அரசு இயற்றிய அவசரச் சட்டம் செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
இதை வரவேற்று புதுக் கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், பொது மக்களும் கொண்டாடினர். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட காளைகளுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), வை.முத்துராஜா (புதுக்கோட்டை), திமுக மாவட்டச் செய லாளர் கே.கே.செல்லப்பாண்டின், நகரச் செயலாளர் ஆ.செந்தில் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.