districts

img

நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் நன்னிலத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பு

திருவாரூர், ஏப்.3 - இந்தியா கூட்டணியின் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ் நன்னிலம், பேரளம் பேரூராட்சி பகுதி களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இவருக்கு  பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம் சுரக்குடி ஊராட்சி கிராமத்தில் நாகை நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு செயலாளரும், நாகை நாடாளு மன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ் தலைமையில் புதன்கிழமை வேட்பாளர் வை.செல்வராஜ் கதிர் அரி வாள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளரும், நன்னிலம் தொகுதி தேர்தல் பணிக்குழு செயலாள ருமான ஜி.சுந்தரமூர்த்தி துவக்க உரையாற்றினார். தொடர்ந்து ஆண்டிப் பந்தல், மாப்பிள்ளை குப்பம், ஸ்ரீவாஞ்சியம், நன்னிலம் மற்றும் கந்தன்குடி, கொல் லாபுரம், பேரளம், திரு மீயச்சூர், பில்லூர், திருக் கொட்டாரம், கொல்லுமாங் குடி, கோவில் திருமா ளம், இஞ்சிக்குடி, பூந்தோட் டம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாக்காளர்களை நேரில் சந்தித்து  கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார். இந்த பிரச்சாரப் பயணம் பூந்தோட்டத்தில் நிறைவு பெற்றது.  சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் திரண்டு நின்று வேட்பாளர் செல்வராஜூக்கு ஆரத்தி எடுத்தும், மலர் கிரீடம் அணிவித்தும், உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில், நாகை நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி  கலைவாணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  டி.வீரபாண்டியன், நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், பேரளம் நகரச் செயலாளர் சீனி.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உது மான் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.