districts

img

காவிரி உபரி நீரை பொன்னனி ஆற்றிற்கு திருப்பும் திட்டத்தை நிறைவேற்றுக!

திருச்சிராப்பள்ளி, நவ.25- அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் வையம்பட்டி ஒன்றிய மாநாடு ஒன்றிய தலைவர் முனியப்பன் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் ஜெ.சுப்பிர மணியன் துவக்கவுரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் எம்.கண்ணன், ஒன்றிய செயலாளர் எம்.ராஜ், மாவட்ட செயலாளர் அ.பழநி சாமி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் முருகன் ஆகி யோர் பேசினர். மாநாட்டில், ஒன்றியத் தலைவ ராக, ஆர்க்கினேஸ்மேரி,  செயலாள ராக ராஜ், பொருளாளராக முனியப் பன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.  மாநாட்டில், காவிரி ஆற்றின் உபரி நீரை பொன்னனி ஆற்றுக்கு திருப்பும் திட்டத்தை காலதாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், ரூ.600 ஐ தினக்கூலியாக  அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.