districts

திருச்சி முக்கிய செய்திகள்

தஞ்சாவூர் வணிக வளாக  கடையில் பணம் திருட்டு

தஞ்சாவூர், அக்.19 -  தஞ்சாவூர் ரயிலடியில் கைவினை கலைஞர்களின் பொருட்களை விற்பனை செய்வதற்கான பூமாலை வணிக வளாகம் உள்ளது. இங்கு பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.  இங்கு தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சாந்தி என்பவரும் கடை நடத்தி வருகிறார். சம்பவத் தன்று அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  பின்னர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு கல்லாவில் இருந்த ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் பணத்தை காணவில்லை மர்ம நபர்கள்  பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.  இது குறித்து சாந்தி தஞ்சை கிழக்கு காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆய்வாளர் சுதா மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, பணத்தை திருடி சென்ற  நபர்களை தேடி வருகின்றனர். 

 டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், அக்.19 -  2023-ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் தமிழ் நாடு அரசு விருது“ 2024-ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திரு நாளன்று வழங்கப்பட இருப்பதால் 2023-2024ஆம் ஆண்டிற் கான “டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது ” பெற விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதற்கான உரிய படி வத்தினை தஞ்சாவூர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ளுமாறும், பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய முன்மொழிவுகளை  30.11.2023  மாத இறுதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித் த்துள்ளார். 

ஆள் மாறாட்டம் செய்து நில மோசடி: 2 பேர் கைது

தஞ்சாவூர், அக்.19 -  தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆள் மாறாட்டம் செய்து நில மோசடி செய்த இருவரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். ஒரத்தநாடு அருகேயுள்ள கருவிழிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி.சௌந்தரராஜன் (70). இவரது அண்ணன் செல்லமுத்து 2017 ஆம் ஆண்டு திடீரென காணாமல் போனார். இது குறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாலும், அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், சௌந்தரராஜனுக்கும், செல்ல முத்துக்கும் சொந்தமான 10 சென்ட் நிலம் ஒக்கநாடு கீழையூர் முதன்மை கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை செல்லமுத்து மகன் ஜெய்சங்கர் (42) அபகரிப்பதற்காக தனது தந்தையைப் போன்று முக ஜாடை உள்ள சமையன்குடிக்காடைச் சேர்ந்த வீ நடராஜனை (61) ஆள் மாறாட்டம் செய்ய தயார்ப்படுத்தினார். இதையடுத்து, ஒரத்தநாடு சார் பதிவாளர் அலுவலகத்தில் 2019 செப்டம்பர் 6 ஆம் தேதி நடராஜனை தனது தந்தை எனக் கூறி,  கையெழுத்திட வைத்து 10 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு மாற்றினார். பின்னர், இந்த நிலத்தை மன்னார் குடியிலுள்ள வங்கியில் வைத்து பணம் வாங்கினார். இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகத்தில் சௌந்த ரராஜன் புகார் அளித்தார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் குற்றப் பிரிவுக்கு காவல் கண்காணிப் பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். இதன் பேரில் மாவட்டக் குற்றக் காவல் பிரிவினர் வழக்குப் பதிந்து ஜெய்சங்கர், நடராஜனை கைது செய்தனர்.

விபத்து இழப்பீடு வழங்காததால்  3 அரசுப் பேருந்துகள்  ஜப்தி

திருச்சிராப்பள்ளி, அக்.19- விபத்து வழக்குகளில் உரிய இழப்பீடு வழங்காத காரணத்தால் தமிழ்நாடு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான 3 அரசு பேருந்துகள்  ஒரே நாளில் அதிரடியாக ‘ஜப்தி’ செய்யப்பட்டு நீதிமன்ற  வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன.  திருச்சி ஜங்சன் வழிவிடு முருகன் கோயில் அருகில் கடந்த 15.12.16 அன்று நடந்த சாலை விபத்தில் திருச்சியை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் இறந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா பொன்னனியாறு தெற்கு முகவனுாரை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் வையம்பட்டி பாலவிடுதி மெயின் ரோட்டில் கடந்த 31.8.18 அன்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.  புதுக்கோட்டை மாவட்டம் மாத்துார் ஜானகி நகரை சேர்ந்த வர் சந்தோஷ் என்ற சந்தோஷ்குமார் (22). இவர் கடந்த 31.8.18 அன்று திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் அசோசியேட் மூக்கை பிள்ளையார் கோயில் தெருவில் நடந்த ஒரு சாலை விபத்தில் படுகாயமடைந்து நீண்ட நாட் களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்த மூன்று வழக்குகளிலும் தமிழ்நாடு அரசு போக்கு வரத்தக் கழகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடை அளிக்க தவறினால் ஏதாவது ஒரு அரசு பேருந்தை ஜப்தி செய்யலாம் எனவும் ஒவ்வொரு வழக்கின் தீர்ப்பிலும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே தீர்ப்புகள் வழங்கப்பட்டு பல மாதங்கள்  கடந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக் காத காரணத்தால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மூன்று அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ‘ஜப்தி’ செய்து நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்தனர்.

பள்ளிப் புத்தாக்க திட்ட பயிற்சி

புதுக்கோட்டை, அக்.19:-  பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்ட ஒருநாள் பயிற்சி வகுப்பினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.  பின்னர் ஆட்சியர் கூறுகையில், மாநில அளவில் 40 சிறந்த தீர்வுகள் கண்டறியப்பட்டு, முதல் 10 இடங்களுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் மீதமுள்ள 30 தீர்வுகளுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை காசோலையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாவட்டத்தில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் பெற்றது மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.

வருடத்திற்கு 10 கோடி மரங்கள் வளர்ப்பு

புதுக்கோட்டை, அக்.19:-  பசுமை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வருடத்திற்கு 10 கோடி மரங்கள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பயிலரங்கம் வனத்துறையின் சார்பில் புதன்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு கடனுதவி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சிறப்பாக பங்களித்தவர்களுக்கு நிதியுதவி, பசுமை சாம்பியன் விருதுகளை வழங்கி  மீண்டும் மஞ்சள்பை திட்டத்தினையும் துவக்கி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது:-  தமிழகம் முழுவதும் 25 பசுமை பள்ளி களை உருவாக்கிடும் வகையில் முதலமைச் சர் தலா ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள் ளார். இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல் நிலைப்பள்ளி, கந்தர்வக்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளி, திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, கீரமங்கலம் மேல் நிலைப்பள்ளி, வெண்ணாவல்குடி மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 அரசு பள்ளிகள் தேர்வாகி உள்ளது. இப்பள்ளிகளில் சூரிய ஒளி மின்சாரம், பிளாஸ்டிக் பயன்பாடில்லா வளாகம் உள்ளிட்ட பல்வேறு பசுமை நட வடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.  மேலும், வருடத்திற்கு 10 கோடி மரங்கள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. முதலமைச்சர் ரூ.50 கோடி மதிப்பில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்;. பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் மரங்களை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.