districts

img

வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பும் மக்களின் ஆதரவும் - இந்தியா கூட்டணி வேட்பாளர்கள்

வலங்கைமான் ஒன்றியம் பாட்டுப் பாடி, சிலம்பம் சுற்றி சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் வாக்குச் சேகரிப்பு

திருவாரூர், ஏப்.15 - வலங்கைமான் ஒன்றியத்தில் நாகை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் வை. செல்வராஜ் கதிர் அரிவாள் சின்னத்திற்கு பாட்டுப் பாடி, சிலம்பம் சுற்றி வாக்குச் சேகரித்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், அரையூர் ஊராட்சி, பைத்தன் சேரியில் மேளதாளத்துடன், அதிர்வேட்டு முழங்க உற்சாகத்துடன் துவங்கிய பிரச்சா ரப் பயணத்திற்கு திமுக ஒன்றியச் செயலா ளர்கள் கோ.தெட்சிணாமூர்த்தி, வீ.அன்பர சன் ஆகியோர் தலைமை வகித்தனர். பிரச்சாரத்தை சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி துவக்கி வைத்து,  இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் வை. செல்வராஜூக்கு கதிர் அரிவாள் சின்னத் தில் வாக்குச் சேகரித்து உரையாற்றினார். நாகை நாடாளுமன்ற தேர்தல் பணிக் குழு தலைவரும், திமுக மாவட்டச் செயலா ளருமான பூண்டி கே.கலைவாணன் மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. எஸ்.கலியபெருமாள், ஒன்றியச் செயலா ளர் என்.இராதா, மாவட்டக் குழு உறுப்பினர்  கே.சுப்பிரமணியன், சிபிஐ ஒன்றியச் செய லாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பிரச்சாரப் பயணத்தில் கலந்து கொண்டனர். பிரச்சார வாகனத்தின் முன்பு, இருசக்கர மோட்டார் சைக்கிள் வாகனங்கள் அணி வகுக்க வடக்குபட்டம், மாணிக்கமங்கலம், சாரநத்தம், வேடம்பூர், மாத்தூர், கிளாக் காடு பாலம், சித்தன்வாழுர், மேலவிட யல், கீழவிடயல், பூந்தோட்டம், வலங்கை மான், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி சுற்றுப் பயணம் நடைபெற்றது. சென்ற இடமெல்லாம் வெற்றி வேட்பா ளர் வை.செல்வராஜூக்கு பெண்கள் ஆரத்தி  எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். வாக்காளர்களின் வேண்டுகோளை ஏற்று  வேட்பாளர் செல்வராஜ், பாட்டுப் பாடியும் சிலம்பம் சுற்றியும் வாக்குச் சேகரித்தார்.

மயிலாடுதுறை தொகுதி  காங். வேட்பாளர் சுதா வாக்குச் சேகரிப்பு

மயிலாடுதுறை, ஏப்.15 - மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா கைச் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இவர், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒன்றியம் மேமாத்தூர், கடலி, திரு விளையாட்டம், கீழ்மாத்தூர், கூடலூர், நெடுவாசல், திருவிடைக்கழி, தில்லை யாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி, திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி, சாத்தனூர், பூதனூர், ஹரிஹரன் கூடல், இலுப்பூர், சங்கரன்பந்தல், உத்திரங்குடி, விசலூர் ஆகிய பகுதி களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.  அவருடன் அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார்  சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், காங்கிரஸ்  மாவட்டத் தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பின ருமான எஸ்.ராஜகுமார், திமுக தகவல் தொடர்பு அணி தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றியச்  செயலாளர் அப்துல் மாலிக், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன் மற்றும்  இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒன்றியச் செயலாளர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர். தில்லையாடி வள்ளியம்மை, காந்தி சிலைக்கு மாலை ஒவ்வொரு பகுதிகளிலும் வேட்பாளர் ஆர்.சுதாவுக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பளித்து பொதுமக்கள் ஆதரவளித்தனர். தில்லையாடி கிரா மத்தில் வாக்குச் சேகரிக்கும் முன் அங்கு  அமைந்துள்ள தியாகி தில்லையாடி வள்ளி யம்மை மற்றும் மகாத்மா காந்தியடிகள் சிலை களுக்கு வேட்பாளர் சுதா, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்து பிரச்சா ரத்தை தொடர்ந்தனர்.

ஊடகவியலாளர் செந்தில்வேல் பிரச்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், திருக்கடையூர் பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதாவுக்கு கை சின்னத்தில் வாக்குக்கேட்டு ஊடகவியலாளர் செந்தில்வேல் ஞாயிறன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான  நிவேதா எம்.முருகன், திமுக தகவல்தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர்கள் பி.எம்.அன்பு, அமுர்த.விஜயக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமாலதி சிவராஜ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் இருந்தனர்.