districts

img

வேட்பாளர் கே‌.என்.அருண்நேரு இறுதிக்கட்ட பிரச்சார பேரணி

பெரம்பலூர், ஏப்.17-  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கே‌.என்.அருண்நேரு, புத னன்று இறுதிக் கட்டமாக நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியில் கலந்து கொண்டு தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். பெரம்பலூர் பழைய பேருந்து நிலை யம் கனரா வங்கியில் இருந்து பாலக்கரை வரை நடைபெற்ற பேரணிக்கு நகர்ப்புற  வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு,  பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்னியூர் சிவா,  தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்க றிஞர் என். ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலை வர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி  மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் உள்பட  கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.