மதுரை,ஆக.12-
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர் நியம னங்களை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தர வுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீரங்கம், குமாரவயலூர், சுப்ரமணிய சுவாமி கோவிலில் தமிழ்நாடு அரசால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் அடிப்ப டையில் பிரபு, ஜெயபாலன் ஆகியோர் அர்ச்ச கர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த நியமனங்களை ரத்து செய்து நீண்ட காலமாக பணியாற்றும் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகிய தங்களை அர்ச்சகர் களாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத் தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட இரண்டு அர்ச்சகர் களின் நியமனத்தை ரத்து செய்தும் ஆகமவிதிக்கு முரணாக, குமாரவய லூர் கோவிலில் அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் இந்த கோவிலில் அர்ச்சகர்களாக (ஐயர்கள்) பல ஆண்டுகளாக பணியாற்றிய வர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது தொ டர்பாக அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதத்தில் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறை செயலர் மற்றும் இந்துசமய அறநிலை யத்துறை ஆணையர் தரப்பில் மேல்முறை யீடு செய்யப்பட்டிருந்தது.
சட்டங்கள்-தீர்ப்புகளை கவனத்தில் கொள்ளாத தனிநீதிபதி
அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களின்படி அர்ச்ச கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதை யும் ஏற்கனவே உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டுள் ளது என்பதையும் தனி நீதிபதி கவனிக்க தவறியுள்ளார்.
மேலும் கோவிலில் ஆகமபூஜைகள் செய்பவர்கள் குறிப்பிட்ட பிறப்பால் சாதி ரீதி யான அடிப்படையில் நியமனம் செய்யப்பட வில்லை என்பதையும் நீதிபதி கவனத்தில் கொள்ள வில்லை அரசால் நியமனம் செய்யப் பட்டவர்கள் முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள். ஆகமங்கள் படி கட்டப்பட்ட கோவில்களில் பூஜைகள் செய்வ தற்கு பிராமணர்களான சிவாச்சாரியார்கள் மட்டுமே தகுதியானவர்கள் என ஆகமங்கள் படி கூட எந்த விதியும் இல்லை.
ஆதி சைவ சிவாச்சாரியார் சங்கம் சார்பாக தொடரப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கின் உத்தரவுகளையும் நீதிபதி கவனிக்க தவறிவிட்டார். கோவில்களில் அர்ச்சகர் நியமனம் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை யும் வழங்கியுள்ளது. இதனை நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. எனவே நீதிபதி யின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை வெள்ளி யன்று நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நடை பெற்றது. தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்து நீதிபதி கள் உத்தரவிட்டனர். இது குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.