திருவாரூர், மார்ச் 20 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து சுவர் எழுத்து எழுதி, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார இயக்கம் துவங்கியது. திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வெற்றி சின்ன மான கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றி யம் குளிக்கரையில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித் தார். கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெய பால், மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.