தஞ்சாவூர், ஜூன் 23-
இணையவழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, விவசாயியிடம் ரூ.9.25 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த 35 வயது விவ சாயி ஒருவருக்கு கடந்த மே மாதம் வாட்ஸ் ஆப் மூலம் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய மர்ம நபர் இணையவழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, வங்கிக் கணக்கு எண்ணை யும் அனுப்பினார்.
இதை நம்பிய விவசாயி மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பினார். ஆனால், மர்ம நபரிடமிருந்து எந்தவித லாபத் தொகையும் வரவில்லை. இதனால், வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபரை விவசாயி தொடர்பு கொண்டார். அப்போது, மேலும் பணம் செலுத்தி னால், முன்பு செலுத்திய தொகைக்கும் சேர்த்து லாபம் அனுப்புவதாக மர்ம நபர் கூறினார். இதனால், விவசாயி மே 22 ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.9.25 லட்சம் வரை பணம் அனுப்பினார்.
அதன் பிறகும் எந்தவித பதிலும் இல்லாததால், தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த விவசாயி, தஞ்சாவூர் இணையதளக் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.