ஜன.31-இல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜன.25 - திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படை வீரர் மற்றும் அதைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், ஜனவரி 31 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு திருச்சிராப் பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து முன்னாள் படைவீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கருத்த ரங்கும் நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சார்ந் தோர் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக இரட்டைப் பிரதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
விபத்தில் பள்ளி மாணவர் பலி
அரியலூர், ஜன.25- அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே புதன் கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி மாண வர் உயிரிழந்தார். பொய்யாதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணையா மகன் வேல் முருகன் (13), அங்குள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், புதன்கிழமை மாலை பிலாக்குறிச்சி யைச் சேர்ந்த அமுல் ராஜ் என்பவரின் இரு சக்கர வாகனத்தில், உதவிகேட்டு ராயம்புரம் சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்ற போது, அங்கு சாலையில் உலர்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மக்காச்சோளம் பயிரில் இரு சக்கர வாகனம் ஏறி யுள்ளது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி, மாணவர் வேல்முருகன் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இதுகுறித்து தக வலறிந்து சம்பவ இடத் துக்குச் சென்ற செந்துறை காவல்துறையினர் சட லத்தையும், காயம டைந்த அமுல்ராஜையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக் கின்றனர்.
தர்பார் கணக்குகள் பதிவேடுகள்: ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை, ஜன.25 - புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பராமரிக்கப்பட்டு வரும் தர்பார் கணக்குகள் பதிவேடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1801 முதல் 1946 ஆம் ஆண்டு வரையிலான தர்பார் ஆவணங்கள், பழைய திவான் அலுவல கத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த முக்கிய ஆவணங்கள், நிலமெடுப்பு தொடர்பான ஆவணங்கள், புதுக்கோட்டை மாவட் டம் தொடர்பான அரசிதழ்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் அனைத்தும் புதுக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப் பட்டு வருகின்றன. இதை மாவட்ட ஆட்சி யர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், புதுக்கோட்டை மாவட்டம் தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பழைய ஆவணங்களை சேதமடையாத வகையில் பாதுகாப்பாக பராமரிப்பதற்கும், பழைய ஆவணங்களை எண்முறை (டிஜிட்டல்) மயமாக்குவதற்கும் தேவையான நடவ டிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தி னார். இந்நிகழ்வில், புதுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சியர் எஸ்.முருகேசன், வரு வாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியா ளர் பிரகாஷ், வட்டாட்சியர் கவியரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்திய கப்பல்படையில் சேர மீனவ வாரிசுகளுக்கு பயிற்சி
அறந்தாங்கி, ஜன.25- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மீனவ வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படை மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேர்வதற்கு இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்தப் பயிற்சிகள் பிப்ரவரி மாதம் தொடங்கி, தொடர்ந்து மூன்று மாதம் நடைபெறும். பயிற்சி கடலூர், இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் தலா ஆயிரம் ரூபாய் வீதம் பயிற்சிகால ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இதற்கு கல்வித் தகுதியாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத்தொகையில் 50 சதவீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உரிய உடல்கூறு தகுதியும் கொண்டிருக்கும் மீனவ வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் கிடைக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர், பழங்குடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
திருச்சிராப்பள்ளி, ஜன.25 - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கப் பட்டு வருகிறது. அதனடிப்படையில் பட்டயப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கா னிக்கல் புரொடக்ஷன் டெக்னாலஜி, எலெக்ட் ரிக்கல், எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினம் சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய, தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் எண்முறை உற்பத்தி துறை யில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப் பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர் களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக் கானிக்கல் புரொடக்ஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் ஆகும். மேலும் தங்கிப் படிக்கும் வசதியும் உள்ளது. இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு தேசிய திறன் மேம் பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்ப கால மாதாந்திர ஊதிய மாக பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 16000 முதல் ரூ.21000 வரை பெறலாம். பொறி யியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 21000 முதல் ரூ.25000 வரை பெறலாம். புகழ் பெற்ற தனியார் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப் படும். பயிற்சியை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண் டும். இப்பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ வழங்கும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜா காலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, திருச்சிராப்பள்ளி-620001. (0431-2463969) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித் துள்ளார்.
41 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
புதுக்கோட்டை, ஜன.25 - 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், புதுக்கோட்டை மாவட்டத் தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த 41 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள னர். மக்களவைத் தேர்தலுக் கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் காவல் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, புதுக் கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 41 காவல் உதவி ஆய்வாளர்களை மாவட்டத்துக்குள்ளேயே வெவ்வேறு காவல் நிலை யங்களுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே புதன் கிழமை உத்தரவிட்டுள்ளார். ஓரிரு நாட்களில் இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களில் பணி யில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக் கிறது.
தைவான் நாட்டில் இறந்தவரின் உடலை தமிழகம் கொண்டு வரக் கோரி மனு
தஞ்சாவூர், ஜன.25 - தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, ஒக்கநாடு கீழையூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சாம்பமூர்த்தி (57). இவரது மனைவி கண்மணி. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சாம்பமூர்த்தி தைவான் நாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் திடீ ரென செவ்வாய்க்கிழமை அதிகாலை சாம்பமூர்த்தி இறந்துவிட்டதாக, அந்நாட்டில் உள்ள தமிழ் சங்கம் மூலம் அவரது மனைவி கண்மணிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தகவலின் அடிப்படையில் கண்மணி, தன் மகள் மற்றும் உறவினர்களுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, தனது கணவரின் உடலை விரைவில் ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவை அவசர கால நடவடிக்கையாக ஏற்ற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மானியத்தில் ஜிங்க் சல்பேட்
தஞ்சாவூர், ஜன.25 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ச.மாலதி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “துத்தநாகச் சத்து பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய, ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் பயிர் நடவுக்கு முன்பு ஒரு முறையும், நடவுக்கு பின் 30 முதல் 40 நாள்களுக்கு ஒரு முறையும் இட்டு, பயிரின் துத்தநாகச் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து பயிரின் மகசூல் இழப்பை தவிர்க்க லாம். பட்டுக்கோட்டை மற்றும் தாமரங்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் ஜிங் சல்பேட் இருப்பு வைக்கப் பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி 50 சதவீத மானி யத்தில் பெற்றுக் கொள்ளலாம். முதலில் வருபவர் களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்” எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது
அரியலூர், ஜன.25 - அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீசார் தா.பழூர் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்யப் படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காலனி தெருவில் வெங்கட் (44) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் வெங்கட் வீட்டில் நடத்திய சோதனையில், அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 542 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், வெங்கட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிராணிகள் வதை தடுப்பு சங்க பொதுக்குழு, செயற்குழு கூட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜன.25 - தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மூலம் திருச்சி ராப்பள்ளி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் 26.6.2020 அன்று பதிவு செய்யப்பட்டது. இச்சங்கத்தின் முதல் பொதுக் குழு மற்றும் மூன்றா வது செயற்குழு கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க வரவு - செலவு விபரம், புதிய மேலாண்மை குழு அமைத்தல், விலங்குகள் மீட்பு மற்றும் பராமரிப்பு சிகிச்சை, தங்குமிடம் அமைத்தல், பொதுமக்களிடம் நன்கொடைகள் பெறுதல், உறுப்பினர் சேர்க்கை, விலங்குகள் நலன் உரிமைகள், பிராணிகள் வதை தடுப்பு சட்டம் (1960) குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள். கால்நடை கொட்டில்கள் (Cattle Pounds) கண்டறிந்து பிராணிகள் வதை தடுப்பு சங்கத்திடம் ஒப்படைத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. இச்சங்கத்தினை சிறப்பாக செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். கால்நடை பரா மரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.எஸ்தர் ஷகீலா நன்றி கூறினார்.
உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம்
பொன்னமராவதி, ஜன.25 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் வேளாண் விற்பனைத் துறை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பொன்ன மராவதி உழவர் சந்தை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. முகாமிற்கு ஊராட்சித் தலைவர் செல்வி தலைமை வகித்தார். ஊராட்சி உறுப்பினர் அழகப்பன் முன்னிலை வகித்தார். பொன்னமராவதி உதவி வேளாண் அலுவ லர்கள் அமலி ஜாஸ்மின், கற்பகம் ஆகியோர் பொன்னமரா வதி உழவர் சந்தை பற்றியும், சந்தையில் இப்பகுதி விவ சாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள காய்களை கொண்டு வந்து எவ்வித இடைத்தரகுமின்றி நேரடியாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் பேசினர். மேலும், விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்ய எவ்வித வாடகையும் இன்றி கட்டிடம், தராசு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன என்றனர்.
திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா
லட்சக்கணக்கானோர் தரிசனம்
தூத்துக்குடி, ஜன. 25 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக நடை பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவி லில் வியாழனன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபி ஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராத னையும் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்த னர். பக்தர்கள் கூட்டத்தால் கடற்கரை, கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது.
ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு: தன்னார்வலர்களுக்கு அழைப்பு
தேனி, ஜன.25- தேனி மாவட்டத்தில் ஈரநில பறவை கள் கணக்கெடுப்பு பணிகளில் விருப்ப முள்ள தன்னார்வலர்கள் கலந்து கொள்ள லாம் என திருவில்லிபுத்தூர் மேகமலை புலி கள் காப்பக துணை இயக்குநர் சி.ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வனத்துறை யின் சார்பில் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் கீழ் ஆண்டுதோறும் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மேகமலை கோட்டத் தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்டமனூர் மற்றும் வருசநாடு வனச்சரக பகுதியில் 6 இடங் களிலும், சின்னமனூர் வனச்சரக பகுதியில் 4 இடங்களிலும், ஹைவேவிஸ் பகுதியில் 7 இடங்களிலும், கம்பம் கிழக்கு வனச்சரக பகுதியில் 6 இடங்களிலும் மற்றும் கூடலூர் வனச் சரக பகுதியில் 2 இடங்களிலும்) என மொத்தம் 25 இடங்களில் ஜனவரி 28. ஆம் தேதி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு தொடர்பாக ஜனவரி 27 அன்று காலை 11 மணியளவில் கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலக வளாகத்தில் துணை இயக்கு நர் தலைமையில் பயிற்சி வகுப்புகள் நடை பெற உள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் வனச்சரக அலுவலர்.சாந்தினியை 9626044211 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
போக்சோ குற்றவாளிக்கு 27 ஆண்டு சிறை
திண்டுக்கல், ஜன.25- 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய 30 வயது இளைஞருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிபதி தீர்ப்பளித்தார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (30). இவர் 2023-ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை வழக்கில் வேடசந்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி சங்கருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். திண்டுக்கல் மாவட்டக் காவல்த்துறைக் கண்காணிப்பாளர் மரு. ஆ.பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பால முருகன், நீதிமன்ற தலைமைக் காவலர் ஆரோக்கிய சவாரியம்மாள் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற உறுதுணையாக இருந்தனர்.